பி.ஏ.,
நடைமுறை
ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய பாடங்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது எனவும், நடைமுறை ஆங்கிலம் படித்தவர்களுக்கு பட்டதாரி
உதவி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் செல்லத்தாய், அனுராதா. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 2004 ல் செல்லத்தாய், 2005 ல் அனுராதா பி.ஏ.,நடைமுறை ஆங்கிலம் (பங்ஷனல் இங்கிலீஸ்) தேர்ச்சி பெற்றனர். வேறு பல்கலையில் 2010 ல் பி.எட்.,தேர்ச்சி பெற்றனர். 2009-10 ல், பட்டதாரி உதவி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு இருவரின் பெயர்களும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றனர். பணி நியமனம் வழங்கவில்லை. இருவரும், "பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கிய பாடத்திற்கு சமமானது என பல்கலை தெரிவித்துள்ளது; எங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தனர். மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு வக்கீல்,"" அரசு உத்தரவுப்படி பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமம் என, பல்கலை கூறவில்லை,'' என்றார். மனுதாரர் வக்கீல்,""கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை அரசு அங்கீகரித்து, பணி நியமனம் வழங்கியுள்ளது,'' என்றார். நீதிபதி: நிகர்நிலை பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமமாக கருதும் அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தை மட்டும் ஏன் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இது தவறு. மனுதாரர்கள் இருவருக்கும் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும், என்றார்.
திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் செல்லத்தாய், அனுராதா. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 2004 ல் செல்லத்தாய், 2005 ல் அனுராதா பி.ஏ.,நடைமுறை ஆங்கிலம் (பங்ஷனல் இங்கிலீஸ்) தேர்ச்சி பெற்றனர். வேறு பல்கலையில் 2010 ல் பி.எட்.,தேர்ச்சி பெற்றனர். 2009-10 ல், பட்டதாரி உதவி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு இருவரின் பெயர்களும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றனர். பணி நியமனம் வழங்கவில்லை. இருவரும், "பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கிய பாடத்திற்கு சமமானது என பல்கலை தெரிவித்துள்ளது; எங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தனர். மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு வக்கீல்,"" அரசு உத்தரவுப்படி பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமம் என, பல்கலை கூறவில்லை,'' என்றார். மனுதாரர் வக்கீல்,""கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை அரசு அங்கீகரித்து, பணி நியமனம் வழங்கியுள்ளது,'' என்றார். நீதிபதி: நிகர்நிலை பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமமாக கருதும் அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தை மட்டும் ஏன் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இது தவறு. மனுதாரர்கள் இருவருக்கும் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக