வெள்ளி, 7 ஏப்ரல், 2017
கருவேல மரங்களை அகற்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் -
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவேல கன்றுகளை
அகற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் – ஆசிரியர் பெற்றோர் ஆதரவுடன் மாணவர்கள் சமூகப்பணி
புதுக்கோட்டை
மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதி அரசுப்பள்ளிகளில் கருவேல மரக்கன்றுகளை அகற்றும்
பணியை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுடன் பள்ளிமாணவர்கள் செய்து
வருகிறார்கள் இந்தப்பணியை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஒருங்கிணைப்பு
செய்து பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி
ஊக்கப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து
சங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள கருவேலக்கன்று அகற்றும் திட்டத்தினுடைய
ஒருங்கிணைப்பாளரும் கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான
கு.சோமசுந்தரம் கூறியதாவது,
நீதி
மன்ற உத்தரவும் அதனைத்தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்தும் அரசு நிர்வாகமும்
ஓரளவுதான் இதுபோன்ற சமூக புரட்சிகளையும் ஏற்படுத்த முடியும் , பொதுமக்களும்
இளைஞர்களும் தாமாக முன்வந்து இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதை
வலியுறுத்தவே இத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் அனைத்து
பள்ளிகளிலும் கருவேல மரக்கன்றுகளை பெற்றோர்களின் உதவியோடு அகற்றும் பணியை
ஊக்கப்படுத்திடும் நோக்கத்திற்காக இந்த சமூகப்பணியில் ஈடுபட்டு நூறு கருவேல
மரக்கன்றுகளை அகற்றி சம்பந்தப்படுத்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்கும் மாணவர்களுக்கு
சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளதோடு அதிக மரக்கன்றுகளை அகற்றும்
மாணவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கவுள்ளோம் , அது மட்டுமின்றி இந்தப்பணியில் தம்மை
இணைத்துக்கொண்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கேடயம் வழங்கப்பட
திட்டமிட்டுள்ளதாகவும் , ஆசிரியர்களின் பங்களிப்போடு பொக்கலைன் இயந்திரம் கொண்டு
சீமைக்கருவேல அகற்றும் பணியை மேற்
கொள்ளவுள்ளதாகவும் இது குறித்து உயர் அலுவலர்களின் ஆலோசனைகளை பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி ப...
-
அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். தேர்வு முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வை...
-
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் க...
-
மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்க...
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...







