வியாழன், 30 டிசம்பர், 2010

திருச்சி செயற்குழு தீர்மானங்கள்

*தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல்.
*பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
*மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்துக்கே வராமல் வெளியிடப்பட்ட ஒரு நபர் ஊதியக்குழு முரண்பாடுகள் முழுவதுமாக களையப்பட வேண்டும்.
*பள்ளிக்கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரித்து
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
இடைநிலை ஆசிரியர்களை கொண்டும்,
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டும் ,
பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை முது நிலை ஆசிரியர்களைக்கொண்டும் , புதிய அலகுகளை ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

எமது உடன் பிறப்புகளுக்கு உன் இயக்கத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு துவக்கத்தில் நிச்சயமாக அலகு விட்டு அலகு மாறுதலை பெற்றுத்தர நமது இயக்கம் முனைப்பு காட்டி வருகிறது என்பதை இனிப்பு செய்தியாக தெரிவித்து மகிழ்கிறோம்.
அது மட்டுமல்ல தொகுப்பூதிய காலத்திற்கான ஊதியமும் விரைவில் வழங்கிட மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களை தொடர்ந்து அணுகி வருகிறோம்,அதன் துவக்கமாக மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நமது காஞ்சிபுரம் மாநாட்டில் பேசிய போது, நிச்சயம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார் என்பது நமக்கு தெம்பூட்டுவதாக உள்ளது.
அது மட்டுமின்றி நம் அமைப்பின் சார்பில் வருகிற சட்ட மேலவையில் நிச்சயம் ஒரு உறுப்பினராவது இருப்பார் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. இதற்கும் நாம் ஒன்று பட்டு உழைப்பது அவசியமாக உள்ளது.
2011 வது ஆண்டானது அதிகப்படியான உழைப்பையும் ஒற்றுமையும் எதிர் பார்த்து காத்திருக்கிறது.
நன்றியுடன்
ஆ.மணிகண்டன்
மாநில ஒருங்கிணைப்பாளர்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
புதுக்கோட்டை மாவட்ட கிளை
மாவட்ட செயற் குழு கூட்டம்

இடம்: நிலஅளவை பணியாளர் சங்க கட்டிடம்-புதுக்கோட்டை
நாள் :17.12.2010 ஞாயிறு
புதுக்கோட்டை மாவட்ட செயற் குழு கூட்டம் மாவட்ட தலைவர் சி.முத்துச்சாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மாவட்ட செயலாளர் எம்.பழனிசாமி வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன்,செயற்குழு உறுப்பினர் டி. ஜெகதீஸ்வரன் ,மாநில துணை தலைவர் பன்னீர்செல்வம்,பொதுக்குழு உறுப்பினர் சி.முகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,தீர்மானங்களை மகளிரணி செயலாளர் இரா. நாகலட்சுமி வாசித்தார்.தீர்மானங்களை மாவட்ட துணை தலைவர் அ.நாடிமுத்து மற்றும் சட்ட ஆலோசகர் அ.ராஜா ஆகியோர் வழி மொழிந்து பேசினர்.
இந்தநிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சு.ராஜேந்திரன் ,சந்திரசேகர்,முருகன்,புதுக்கோட்டை விஜயமாணிக்கம்,முருகராஜ்,ஜெயந்தி திருமயம் நாகப்பன்,ஸ்டான்லி, ஜான் பீட்டர்,ஹாரியட் பெர்சி,பொன்னமராவதி பூச்சி, மணமேல்குடி விக்டர்,ராமநாதன்,அறந்தாங்கி கோவிந்தராஜ், சுப்பிரமணி,திருவரங்குளம் விஜயரகுநாதன்,பால்ராஜ்,அன்னவாசல் கார்த்திகேயன்,பால்ராஜ் கரம்பக்குடி ரெங்கராஜ்,கீரனூர் முல்லை செல்வன்,அரிமளம் ராமு,அவுடையர்கோயில் அரசகுமார், விராலிமலை சுந்தரகுமார் ஆகியோர் தீர்மானங்களை வரவேற்று பேசினர்.இறுதியாக முருகராஜ் நன்றி கூறினார்.
செயற் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
*தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் எங்கள் மாநாட்டில் அறிவித்த படி விரைவில் ஏற்பு ஆணை வெளியிட வேண்டும்.
*பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்.
*அனைத்து பதவி உயர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண்ணின் அடிப்படையில் வழங்க வேண்டும்.
*ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை முழுவதுமாக களைந்திட வேண்டும்.

பிரபலமான இடுகைகள்