செவ்வாய், 8 ஏப்ரல், 2014

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாடத்திற்கான வினாத்தாளில் குழப்பமான வினாக்கள் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து தேர்வுத்துறை இயக்குனரிடம் முறையிட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு









பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில், குழப்பமான கேள்விகள் இடம் பெற்றுள்ளதால் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் சென்டம் எடுப்பது குறையும். பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நடந்தது. அதில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் குழப்பமான கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக மாணவ மாணவியர் தெரிவித்தனர். கேள்வி எண் 41ல் ஆடியில் உருவாகும் உருவப்பெருக்கம் 1/3 எனில் அந்த ஆடியின் வகை.... என்ற கேள்விக்குரிய விடைகளாக குழி, குவி, சமதளம் என்று கொடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் பாடப்புத்தகத்தில் பக்கம் 299ல் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக் காட்டு கணக்கு எண் 17.3ன்படியும், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சிறப்பு வழிகாட்டியிலும் குழி ஆடி என்றே விடை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குவியாடி என்ற பதிலும் பொருத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த விடை சரியானது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல கேள்வி எண் 29ல் போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தும் எரிபொருள்கள் யாவை? என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் லிகுட் பயோ ப்யூல்ஸ் என்று உள்ளது.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த விடையை குறிப்பிடும் போது திரவ உயிரி எரிபொருள் என்று கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி கேள்வித்தாளில் கொடுக்கவில்லை. ஆங்கிலத்தில் உள்ள கேள்வியின் படி இதற்கான விடை  உயிரி ஈதர், உயிரி ஆல்கஹால், உயிரி பெட்ரோல் எனபவை பதிலாக வருகிறது.  இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுபோல் குழப்பமாக கேள்விகள் அமைந்ததால் சரியான விடையை தேர்வு செய்து எழுதுவதிலும், புத்தகத்தில் ஒன்றும் கேள்வியில் ஒன்றாக விடை கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கேள்வித்தாளில் புளூ பிரிண்ட்படி குறு வினாக்கள்  பகுதியில் காரணம் கூறுதலும், உறுதிப்படுத்துதலும் வினா கேட்கப்படவில்லை.  அதுமட்டும் அல்லாமல் ஒரு சில வினாக்களுக்கு  இரு வேறு பதில்கள் இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற குழப்பம் ஏற்படும் காலங்களில் தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ விடைகளை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றார்.
தினகரன் பத்திரிக்கையில் நமது தலைவரின் அறிக்கை   
 இந்த வினாக்களின் விவரங்களை தெளிவாக ஆய்ந்து தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார் குன்றாண்டார் ஒன்றிய தலைவர் மணிகண்டன் , செயலாளர் முருகேசன் கந்தர்வகோட்டை ஒன்றிய நிர்வாகி சோமசுந்தரம் ஆகியோரை மாநில மையம் பாராட்டுகிறது 

பிரபலமான இடுகைகள்