அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
வியாழன், 25 நவம்பர், 2010
திங்கள், 15 நவம்பர், 2010
தஞ்சை ஒன்றிய கூட்டம்
14.11.10 அன்று தஞ்சை ஒன்றிய கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் திரு.சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திரு. கோ. செந்தில் குமார் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் திரு. தி. ஜெயசெல்வன் அவர்கள். வரவேற்புரை ஆற்றினார். அலகு விட்டு அலகு மாறுதல், பங்களிப்பு ஓய்வூதியம், பணியேற்ற நாள் முதல் பணிவரன் முறை, ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மூதுரிமை போன்ற பொருள்கள் விவாதிக்கப் பட்டன. வட்டாரத் தலைவர் திரு.ஜெயபிரபு, தஞ்சை ஒன்றிய செயலாளர் திரு. குலாம் ஆகியோர் கருத்துரை நல்கினர். தஞ்சை ஒன்றியத் தலைவர் திரு. சுரேஷ் குமார் இறுதியில் நன்றி கூறினார்.
வெள்ளி, 5 நவம்பர், 2010
கால அவகாசம் நீடிப்பு
தமிழக சட்ட மேலவை தேர்தலுக்கு வாக்காளர் சேர்க்கை காலக் கெடுவை, டிசம்பர் 7 வரை நீடித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவகாசத்தினை பயன்படுத்திக் கொண்டு அவசியம் அனைவரும் தம்மை பதிவு செய்து கொண்டு வாக்களிக்க முன்வாருங்கள்.
புதன், 3 நவம்பர், 2010
முக்கிய அறிவிப்பு
சட்ட மேலவை தேர்தலுக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 06.11.2010 ஆகும். விண்ணப்பிபதற்கான தகுதிகள் அனைத்தும் தங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் நண்பர்கள் வாயிலாக தங்களுக்கு தெரிய வந்திருக்கும். நம் சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் அந்தந்த ஒன்றிய வாரியாக அனைவருக்கும் படிவங்களை வழங்கியிருப்பார்கள். படிவங்கள் கிடைக்காத பட்சத்தில், பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுங்கள். உடன் உங்களைத் தேடி படிவம் வரும். கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே பூர்த்தி செய்து அலுவலர்களிடம் ஒப்படைத்து ஜனநாயக கடைமையை நிறைவேற்றுவதில் முன்னோடியாக இருங்கள்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தஞ்சை மாவட்டத்தின் மாவட்டத் துணைச்செயலாளர் திரு.கோ.செந்தில்குமார் அவர்களின் Splendor Plus இருசக்கர வாகனம் 2.2.10 அன்று மாலை தஞ்...
-
சென்னையில் நடைபெற்ற அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வின் இரண்டாம் நாள் இறுதியில் ,இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களை நம் மாநிலத் தலைவர் ...
-
* தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல். *பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரச...