நாள் : 10-7-2009
நேரம் : மாலை 5 மணி
இடம் : பாபநாசம்
தலைமை : எஸ்.கார்த்திகேயன்
பாபநாசம் ஒன்றியத் தலைவர்
முன்னிலை :1. த.ஜெயசெல்வன்
தஞ்சை மாவட்ட பொருளாளர்
2. ஜோ.ஜூட் அமல் ஜெயராஜ்
பாபநாசம் ஒன்றியச் செயலாளர்
3. அ.செந்தில் குமார்
பாபநாசம் ஒன்றிய பொருளாளர்
கலந்து கொண்டவர்கள்:
பாபநாசம் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும்.
விவாதிக்கப்பட்ட கருத்துக்கள்/கோரிக்கைகள்:
- அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
- பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
- பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் பெறுதல்
- CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
- ஆசிரியர் பயிற்றுனராக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
- பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.
- தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.
- உறுப்பினர் சேர்க்கையினை தீவிரப்படுத்துவது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக