புதன், 29 ஜூலை, 2009

உறந்தை ஒன்றியக்கூட்டம்

நாள் :29-7-2009
இடம் :ஒரத்தநாடு
நேரம் :மாலை 5 மணி


DSC03412 DSC03411



வரவேற்பு : ப.குபேந்திரன் உறந்தை ஒன்றியப் பொருளாளர்
கூட்டத் தலைமை : பி.வீரமணி உறந்தை ஒன்றியத்தலைவர்


முன்னிலை:
1)த.ஜெயசெல்வன் தஞ்சை மாவட்டப் பொருளாளர்
2)ச.சண்முகவடிவேலு தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்
3)கே.செந்தில்குமார் மதுக்கூர் ஒன்றியத்தலைவர்


தீர்மானங்கள்:
1. அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.


2.பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.


3.பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல்


4.CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.


5.பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.


6.தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.


7.கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரிக்க வேண்டும்.


8.36 ‘a’ பணிவிதியினை அமல்படுத்த வேண்டும்.


9.தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அனைத்துவகை முந்துரிமைகளும் ஆசிரியர் தேர்வாணையத் தர எண் (அதாவது மாநில அளவில் முந்துரிமை) அடிப்படையிலேயே வழங்க வேண்டும்.


10.B.Ed., பட்டதாரிகளையே நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற அனுமதிக்க வேண்டும்.


11.M.Phil., பட்டப்படிப்பிற்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.


நன்றியுரை : எம்.துரைமுருகன் உறந்தை ஒன்றியச் செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்