ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் அவசரக்கூட்டம் புதுகையில் நடந்தது


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள்  அவசர ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் சி.முத்துசாமி தலைமை வகித்தார்.மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், தஞ்சை மாவட்டத்தலைவர் தி.சீனிவாசன்,மாநிலத்துணைத்தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை வட்டாரத்தலைவர் சோ. விஜயமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். இந்த அவசர ஆலோசனைக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 தற்போதைய தமிழக முதல்வரால் 2004 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு கடந்த ஆட்சியில் பணிவரன் செய்யப்பட்ட 53,000 ஆசிரியர்களுக்கு  தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை முழுப் பணிக்காலமாக கருதி இந்த நிதி கூட்டத்தொடரில் ஆணை வெளியிட வேண்டுதல்                            
தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த தமிழக அரசை வேண்டுதல்.
பொது மாறுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அலகு விட்டு அலகு மாறுதல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தும் இது நாள் வரை  கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருவது,
           அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளாக  ஈர்ப்பு செய்யப்பட இருப்பதால் பள்ளிக்கல்விதுறையின் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொதுவான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டுதல்.
     வரும் காலங்களில்  பள்ளிக்கல்வித்துறையின் தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகில்  புதிய நியமனங்களுக்கு முன்னதாக வெளி மாவட்டங்களில் மாறுதல் பெற வாய்ப்பின்றி பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கலந்தாய்வு நடத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்ளுதல்,
இதில்,தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் த.ஜெயச்செல்வன் ,ப.ஜெயபிரபு,பா.கருணாநிதி , பாபநாசம் நா.பிரபாகரன் ,புதுக்கோட்டை மாவட்டப்பொருப்பாளர்கள் கோவிந்தராசன்,மாரிமுத்து,எ.நாடிமுத்து,சி.செந்தில்,நாயகம்,பிரவீன், மாவட்ட அமைப்புச் செயலர் எம்.முத்துக்குமார்,சட்ட ஆலோசகர் எ.ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ச.முகேஷ்,  பா.ரமேஷ் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக புதுக்கோட்டை வட்டாரப்பொருளாளர் ஜ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.  
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்