சனி, 18 ஜூலை, 2009

பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு








தஞ்சைக்கு 18.07.09 அன்று மாண்பு மிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தஞ்சை ,தமிழ்ப் பல்கலை கழகத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை சார்ந்த ஒரு விழாவிற்கு வருகை தந்தார்.
அன்று காலை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்களும், தஞ்சை ஒன்றிய பொறுப்பாளர்களும் , மாவட்ட தலைவர் திரு. தி. சீனிவாசன் அவர்கள் தலைமையில் சந்தித்து சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களில் 3000 பேருக்கு அலகுவிட்டு அலகு மாற அனுமதி அளித்து ஆணை வெளியிட்டதற்காக நன்றி தெரிவித்து ஆளுயர ரோஜா மாலை ஒன்று அணிவிக்கப் பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்