வியாழன், 3 செப்டம்பர், 2009

அஞ்சலி ......




ஆந்திர முதல்வர் , திரு. ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி , எம் அனைவரையும் மீளாத் துயரில் மூழ்கடித்து விட்டது. அன்னாரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , நம் தமிழக அரசு 04/09/09 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

பல ஏழை , எளியோர்க்கு தன் பல்வேறு நலத் திட்டங்கள் வழியாக வாழ்வளித்து, சிறந்த அரசை நடத்தி வந்த திரு. ராஜசேகர ரெட்டி அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தார்க்கும், அவரோடு இறந்த மற்றவர்களின் குடும்பத்தார்க்கும், ஆந்திர மக்களுக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்