திங்கள், 15 நவம்பர், 2010

தஞ்சை ஒன்றிய கூட்டம்




14.11.10 அன்று தஞ்சை ஒன்றிய கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் திரு.சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திரு. கோ. செந்தில் குமார் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் திரு. தி. ஜெயசெல்வன் அவர்கள். வரவேற்புரை ஆற்றினார். அலகு விட்டு அலகு மாறுதல், பங்களிப்பு ஓய்வூதியம், பணியேற்ற நாள் முதல் பணிவரன் முறை, ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மூதுரிமை போன்ற பொருள்கள் விவாதிக்கப் பட்டன. வட்டாரத் தலைவர் திரு.ஜெயபிரபு, தஞ்சை ஒன்றிய செயலாளர் திரு. குலாம் ஆகியோர் கருத்துரை நல்கினர். தஞ்சை ஒன்றியத் தலைவர் திரு. சுரேஷ் குமார் இறுதியில் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்