வெள்ளி, 17 டிசம்பர், 2010

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
புதுக்கோட்டை மாவட்ட கிளை
மாவட்ட செயற் குழு கூட்டம்

இடம்: நிலஅளவை பணியாளர் சங்க கட்டிடம்-புதுக்கோட்டை
நாள் :17.12.2010 ஞாயிறு
புதுக்கோட்டை மாவட்ட செயற் குழு கூட்டம் மாவட்ட தலைவர் சி.முத்துச்சாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மாவட்ட செயலாளர் எம்.பழனிசாமி வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன்,செயற்குழு உறுப்பினர் டி. ஜெகதீஸ்வரன் ,மாநில துணை தலைவர் பன்னீர்செல்வம்,பொதுக்குழு உறுப்பினர் சி.முகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,தீர்மானங்களை மகளிரணி செயலாளர் இரா. நாகலட்சுமி வாசித்தார்.தீர்மானங்களை மாவட்ட துணை தலைவர் அ.நாடிமுத்து மற்றும் சட்ட ஆலோசகர் அ.ராஜா ஆகியோர் வழி மொழிந்து பேசினர்.
இந்தநிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சு.ராஜேந்திரன் ,சந்திரசேகர்,முருகன்,புதுக்கோட்டை விஜயமாணிக்கம்,முருகராஜ்,ஜெயந்தி திருமயம் நாகப்பன்,ஸ்டான்லி, ஜான் பீட்டர்,ஹாரியட் பெர்சி,பொன்னமராவதி பூச்சி, மணமேல்குடி விக்டர்,ராமநாதன்,அறந்தாங்கி கோவிந்தராஜ், சுப்பிரமணி,திருவரங்குளம் விஜயரகுநாதன்,பால்ராஜ்,அன்னவாசல் கார்த்திகேயன்,பால்ராஜ் கரம்பக்குடி ரெங்கராஜ்,கீரனூர் முல்லை செல்வன்,அரிமளம் ராமு,அவுடையர்கோயில் அரசகுமார், விராலிமலை சுந்தரகுமார் ஆகியோர் தீர்மானங்களை வரவேற்று பேசினர்.இறுதியாக முருகராஜ் நன்றி கூறினார்.
செயற் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
*தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் எங்கள் மாநாட்டில் அறிவித்த படி விரைவில் ஏற்பு ஆணை வெளியிட வேண்டும்.
*பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்.
*அனைத்து பதவி உயர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண்ணின் அடிப்படையில் வழங்க வேண்டும்.
*ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை முழுவதுமாக களைந்திட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்