புதன், 20 பிப்ரவரி, 2013

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் என அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும்.
மேலும் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியவற்றை கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்