புதன், 20 பிப்ரவரி, 2013

பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் ஆலோசனை மையம்


தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடமாடும் ஆலோசனை மையம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எற்படுத்தப்படவுள்ளது.
பள்ளி மாணவர்கள் சற்றுப்புறச்சூழல், குடும்ப நிலை, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனச்சோர்வு, மனக்குழப்பம், பாலியல் கொடுமைகள், மதிப்பெண் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவால் கொலை, தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதுடன் உடல் மற்றும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையை மாற்றி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்க, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்