ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


சிவகங்கையில் புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்துசெய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் பெஞ்சமின் தலைமை வகித்தார்.  செயலாளர் சிங்காரவேலன், பொருளாளர் மாரியப்பன், மகளிரணி செயலாளர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தால் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எவ்வித பலனும் இல்லை. எனவே இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, பாலகிருஷ்ணன், பீட்டர், சண்முகவடிவேல், வெள்ளைத்துரை, பூமிநாதன், மலைராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்