ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், : தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி நேற்று முன்தினம் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.டி. ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.கே.எஸ். ஆனந்த் வரவேற்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள்கைவிடவேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை மாநில அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவேண் டும். 

இடைநிலை, முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பணிப் பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், நடராஜ், ஆறுமுகம், சுந்தரபாண்டியன், ஹரி, பாலமுருகன் மற்றும் தோழமை சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அமைப்பு செயலாளர் எஸ். வெங்கடேஷ்பாபு நன்றி கூறினார்.
தினகரன் திருவள்ளூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்