தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் தொடக்கக்கால முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று 05/04/2015 காலை 11.15 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
தொடக்கக்காலம் தொட்டே நம்மோடு இணைந்து பணியாற்றிய அய்யா அவர்கள் நமது இயக்கத்தோடு கொள்கை ரீதியில் முரண்பட்டிருந்தாலும் அன்னாரின் கொள்கைப்பிடிப்பு எல்லோரையும் கவர்வதாகவும் தனித்துவமிக்கதாகவும் நமது மனத்தில் இடைபெற்றுள்ளது ....
அன்னாரின் இறப்பு என்பது அனைத்து சங்கங்களுக்கான இழப்பாகவே ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கருதுகிறது.....
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும் இயக்க நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக