செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும் – ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் 10 ல் முடிவடைகிறது. பள்ளிக்கல்வித்துறை பெரும்பாலும் தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கி விடும் ஆனால் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் ஏப்ரல் இருபது தேதிக்கு பிறகு  விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளது இதனைத்தொடர்ந்து வழக்கம்போல தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்குமாறு ஆசிரியர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் இறுதி வாரத்தில் தொடங்குவதால் மொழிப்பாடங்களுக்கு மே மாதம் இரண்டாம் வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது இதனால் தங்களது குழந்தைகளின் விடுப்பு நேரத்திலும் அவர்களோடு இருக்க இயலாத நிலை ஏற்படும் என்றும் இதனால் தங்களது குடும்பத்தை பிரிந்து வெளிமாவட்டங்களில் பணியாற்றுபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்று ஆசிரியைகள் புலம்புகின்றனர்.

மாலை நேர சிறப்பு வகுப்புகள் விடுமுறைகளில் சிறப்பு பயிற்சி என்று அரசின் வழிகாட்டுதலுக்கிணங்க செயற்படும் ஆசிரியர்கள் இந்த விடுமுறையையாவது தங்களது பிள்ளைகளோடு இருந்து பராமரிப்பு செய்ய வாய்ப்பாக விடைத்தாள் திருத்தும் பணியை விரைவில் தொடங்கிடவும்  இதற்கு காரணமாக கூறப்படும்  ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வுகளை நடத்திட ஏதுவாக சுழற்சி முறையில் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைப்பதன் மூலம் கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை இன்றி மூன்றாம் பருவத்தேர்வுகளை செம்மையாக நடத்திட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர் இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஆசியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்