வியாழன், 18 அக்டோபர், 2012

10ம் வகுப்பு செய்முறை பயிற்சி தனித்தேர்வர் பதிவு செய்ய 31ம் தேதி வரை அவகாசம்










2012 -13 கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு, தனித் தேர்வர்களாக எழுதுவோர்   அறிவி யல் பாடத்திற்கான செய் முறை தேர்வு எழுத வேண் டும். இதற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க பதிவு செய்ய கடைசி தேதி கடந்த செப்டம்பர் 27 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பதிவு செய்யும் தேதியை நீட்டிக்க கோரி பலர் விண்ணப்பித்துள்ளனர். 
இதையடுத்து செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ய வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத தனித்தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனித் தேர்வர்கள்  கீழ்க்கண்ட இணைப்பு மூலம்  விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை இர ண்டு நகல்களில் பூர்த்தி செய்து, தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகங்களில் வரும் 31ம் தேதிக்குள் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். இது குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள் ளவும். 

application download here


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்