வியாழன், 18 அக்டோபர், 2012

அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில் 967 முதல் 1398 முடிய உள்ள430 ஆசிரியர்களுக்கு 19.10.2012 மற்றும் 20.10.2012 ஆகிய தேதிகளில் online மூலம் கலந்தாய்வு



1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான  அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில்  967 முதல்  1398 முடிய உள்ள430 ஆசிரியர்களுக்கு  online மூலம் கலந்தாய்வு 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது. கலந்தாய்வில் இம்முன்னுரிமையில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வினை உரிமைவிடல் செய்வதால் ஏற்படக்கூடிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியிடங்களும் நிரப்பப்படவேண்டும் என்ற அடிப்படையில் அன்றே 1399 முதல்1466 முடிய பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் அழைக்கப்படுகின்றனர் இருப்பினும் காலிப்பணியிடம் இருக்கும் வரை மட்டுமே பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
19.10.2012                           
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண். 967 முதல் 1116 வரை
(150 ஆசிரியர்கள் மட்டும் )         
 பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.1117 முதல் 1216 வரை
(100 ஆசிரியர்கள் மட்டும்)          
20.10.2012                                    
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண். 1217 முதல் 1366 வரை 
150 ஆசிரியர்கள் மட்டும்)         
 பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண். 1367 முதல் 1466 வரை 
100 ஆசிரியர்கள் மட்டும்)   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்