புதன், 27 பிப்ரவரி, 2013

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக டாக்டர் வைகை செல்வன் பொறுப்பேற்கிறார்

தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வித்துறை, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சிவபதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் டி.பி.பூனாட்சி, டாக்டர் வைகை செல்வன், கே.சி. வீரமணி ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கபட்டுள்ளனர்.
காதி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சராக டி.பி.பூனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக டாக்டர் வைகை செல்வன், சுகாதாரத்துறை அமைச்சராக கே.சி.வீரமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கல்வித்துறை, தொல்லியல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் ஆகிய துறைகளை புதிய அமைச்சர் வைகை செல்வன் கவனிப்பார். ஊரகத் தொழில்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியனுக்கு சுற்றுலாத் துறை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ள கே.பி.முனுசாமிக்கு, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை ஆகியவை கூடுதல் பொறுப்புகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்ட மூன்று பேரும் நாளை காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்