ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

தமிழ் முரசில் - திருவள்ளூர் ஆர்பாட்டம்

2015
13
Feb
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து கோரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம் 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
திருவள்ளூர்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத் துக்கு மாநில செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.டி. ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் பி.கே.எஸ்.ஆனந்த் வரவேற்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை மாநில அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும், இடைநிலை,
முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், பணி பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இதில், மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், நடராஜ், ஆறுமுகம், சுந்தர பாண்டியன், ஹரி, பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமைப்பு செயலாளர் எஸ்.வெங்கடேஷ்பாபு நன்றி கூறினார்.சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; சமூக நலத்துறை ஆணையாளரை கண்டித்து திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சத்யநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி வாசுகி உ
- See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=70442#sthash.Hh6EVs1y.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்