ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

புதுக்கோட்டை மாவட்ட ஆர்பாட்டம் - தினமலர்


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள்

13பிப்
2015 
புதுக்கோட்டை: புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, மாவட்ட தலைவர் முத்துச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தொடங்கிவைத்து பேசினார்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, 2004 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2006 ம் வரையிலான தொகுப்பூதிய காலத்தை முழுப்பணி காலமாக்கி ஆணை வெளியிட வேண்டும்.தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஓவிய, கணினி, உடற்கல்வி, இசை ஆசிரியர் ஒப்பந்த நியமனங்களை ரத்துசெய்து, காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவர வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வை, ஒழிவு மறைவின்றி நடத்திட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்துணை தலைவர் பன்னீர்செல்வம். மாநில சட்ட ஆலோசகர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்