நாள் :27-7-2009
இடம் :தஞ்சாவூர்
நேரம் :மாலை 5 மணி
வரவேற்பு
:
மு.தனலெட்சுமி
தஞ்சை ஒன்றியப் பொருளாளர்
கூட்டத் தலைமை : புகழ்.ஜெயபிரபு
தஞ்சை ஒன்றியத்தலைவர்
முன்னிலை:
1)தி.சீனிவாசன்
தஞ்சை மாவட்டத்தலைவர்
2)த.ஜெயசெல்வன்
தஞ்சை மாவட்டப் பொருளாளர்
3)கோ.செந்தில்குமார்
தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்
தீர்மானங்கள்:
- அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
- பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
- பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல்
- CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
- பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.
- தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.
- கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரிக்க வேண்டும்.
- 36 'a' பணிவிதியினை அமல்படுத்த வேண்டும்.
- தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அனைத்துவகை முந்துரிமைகளும் ஆசிரியர் தேர்வாணையத் தர எண் (அதாவது மாநில அளவில் முந்துரிமை) அடிப்படையிலேயே வழங்க வேண்டும்.
- B.Ed., பட்டதாரிகளையே நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற அனுமதிக்க வேண்டும்.
- M.Phil., பட்டப்படிப்பிற்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
- புதிய ஆசிரியர் நியமனத்திற்கு முன்னர் ஒன்றிய அளவில் ஒரு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும்.
நன்றியுரை : ஜி.கீதா
தஞ்சை ஒன்றியச் செயலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக