வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவன மாணாக்கருக்கு உதவித்தொகை


அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் 1 லட்சத்திற்கும் அதிகமான வருமாணம் இல்லாமல் இருக்கு வேண்டும், குடும்பத்தில் எவரும் பட்டம் பெற்றவராக இருத்தல் கூடாது.  


ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.200ம் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.250ம், 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.500ம் படிப்புக் கட்டணமாக வழங்கப்படும்.

இலவச கல்வி திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த தேர்வுக் கட்டணங்கள் வழங்கப்படும்

மருத்துவம், பொறியிய்ல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உட்பட தொழிற்கல்வி பட்டப்படிப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
 பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு அதிகமாக இல்லாமலும், பட்டப்படிப்பு பெறமாலும் இருக்க வேண்டும். தனியார் தொழிற் கல்லூரிகள் ஒற்றை சாளர முறையில் அரசு ஒதுக்கீடு பெற்று பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.



பட்டயப்படிப்பு மற்றும் மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு அதிகமாக இல்லாமலும் இருக்கும் மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் வழங்கப்படும்.


மாணவர்கள் கல்வித்தொகையை பெற விரும்பினால் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலேயே விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவனங்களுடன் இணைத்து புதிய உதவித்தொகைக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும. விண்ணப்பிக்கும் குறித்த தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்