வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

தொழிற்கல்வி ITI -பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - தமிழக அரசு அறிவிப்பு

தொழிற்படிப்பு  பயிலும் மாணவர்களுக்கு இரண்டாயிரத்து இருபத்துமூன்று தொலைநோக்கு திட்டத்தின் படி இரண்டுகோடி பேரை வேலை வாய்ப்புக்கு ஏற்ற படி, பயிற்சி மற்றும் திறன் பெற்ற பணியாளர்களாக உருவாக்கும் நோக்குடன், திறன் பெற்ற மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனை அரசு கருத்திற்கொண்டு தொலைவிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து சென்று வர பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல இவர்களுக்கும் விலையில்லா மிதி வண்டி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

இதன்மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும்  21,925 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்  என அறிவிக்கப்பட்டுள்ளது.
   





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்