வியாழன், 1 நவம்பர், 2012

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஈர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட பணப்பிடித்த நடைமுறை குறித்த விளக்கக்கடிதம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனி கணக்கு எண்ணும்  தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றிவரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி கணக்கு எண்ணும் நடைமுறையில் உள்ளது .

இந்நிலையில் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களின் தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்திற்கு பிடித்தம் செய்வதில் குழப்பம் நிலவி வந்தது .இதனை தெளிவு படுத்தும் பொருட்டு மாநில தலைமைக்கணக்காளர் அவர்களின் விளக்கக்கடிதம் இத்துடன் இடுகையிடப்படுகிறது.
தற்போது பணியாற்றும் பள்ளித்தலைமையாசிரியரின் பரிந்துரையோடு புதிய கணக்கு எண் தொடங்கி அந்த கணக்கு எண்ணுக்கு ஏற்கனவே உள்ள  நடைமுறைகளின் படி பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை புதிய கணக்கு எண்ணுக்கு மாற்றிக்கொள்ள இந்த வழிகாட்டுதல் நெறிமுறை வழிவகை செய்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்