ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

உண்ணாவிரதம் அரசின் கவனத்தை ஈர்க்கும்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்கள் பங்கேற்ற "2014 பிப்ரவரி 9 "
உண்ணாவிரதம் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மிகுந்த எழுச்சியோடும் உத்வேகத்துடனும் இனிதே நடந்து முடிந்திருக்கிறது.

இது குறுகிய நாட்களில் திட்டமிடப்பட்டு அசுர வேகத்தில் செயற்பட்ட மாநில மாவட்ட  ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சங்க உணர்வாளர்களால் சாத்தியமானது என்பதை மாநில மையம் நன்றியோடு பார்க்கிறது.

இந்த உண்ணாவிரதத்தில் தமிழக முதல்வரை ஈர்க்கும் வண்ணம் பலரும் அவரின் புகழ்பாடினர் இது முதல்வரை நெகிழச்செய்யும் என்றாலும் தொகுப்பூதிய முறையை ஒழித்து  55000 ஆசிரியர் குடும்பங்களில் ஒளியேற்றிய அந்நாளைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களையும் அவர் ஆசிரிய சமூகத்திற்கு அளித்துள்ள அத்துணை சலுகைகளையும் நன்றியோடு பார்க்கிறோம்.

     எமது அடிப்படைக் கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல்

 தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை பணிக்காலமாக கருதி பணப்பலனுடன் கூடிய அரசாணையை வெளியிட வேண்டுதல்

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பதவி உயர்வு வாய்ப்பில்லாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடங்களில் 50%
 பதவி உயர்வு பணியிடங்களாக  மாற்றி நடவடிக்கை வேண்டுதல்.
 
ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுதல்.
 
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டுதல்

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வேண்டுதல்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ள நாம் இன்னும் ஒரு சில நாட்களில் நேர்மறை தகவல்களை எதிர்நோக்கி
இருக்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்