புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தமிழ்நாடு ஆசிரியர்
முன்னேற்ற சங்க புதிய வட்டாரக்கிளை நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயற்குழுக்கூட்டம்
திருமயம் வட்டாரத்தலைவர் நாகப்பன் தலைமையில்
சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் முத்துசாமி மாவட்ட
செயலாளர் எம்.பழனிச்சாமி மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை
வகித்தனர் . மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார்.
அரிமளம்
வட்டாரக்கிளை புதிய தலைவராக சோமு வட்டார
செயலாளராக மதியழகன் வட்டார பொருளாளராக சண்முகம்
வட்டார ஒருங்கிணைப்பாளராக ராமு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
இதில் பொதுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின்
போக்குவரத்து வசதியை கருத்திற்கொண்டு பழைய முறைப்படி காலை பத்துமணிக்கு தேர்வு
நேரத்தை மாற்றிட அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது
புதிய
பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுதல் அலகு விட்டு அலகு மாறுதலை நடத்திட வேண்டுதல் தொகுப்பூதியத்தில்
பணியாற்றிய காலத்தை பணிக்காலமாக்கி அரசாணை வெளியிட வேண்டுதல்
நடுநிலைப்பள்ளிகளில்
பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் நேரடி
நியமனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடங்களில் 50% பணியிடங்களை பதவி உயர்வு பணியிடங்களாக மாற்றிட நடவடிக்கை வேண்டுதல்
ஒப்பந்த
முறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுதல்
உள்ளிட்ட தீர்மானங்கள் தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன . இதில்
மாநில நிர்வாகிகள் சட்ட ஆலோசகர் ராஜா செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி செயலாளர் நாகலட்சுமி
துணைத்தலைவர்கள் ராஜாங்கம் முகேஷ் வட்டார
நிர்வாகிகள் ரமேஷ்குமார் சோமசுந்தரம் பிரவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
முன்னதாக வட்டாரத்தலைவர் சோமு அனைவரையும் வரவேற்றார் இறுதியாக பொருளாளர் சண்முகம்
நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக