சமூக ஏற்றத்தாழ்வுகள் அது சார்ந்த போராட்டங்கள் மாநிலம் முழுக்க தலைவிரித்தாடியபோது எல்லோரும் சமமாக அமர்ந்து படிப்பதை உறுதி செய்து சமூக ஏற்றத்தாழ்வை ஓரளவு மட்டுப்படுத்தியதில் காமராசர் காலத்து தொடக்கப்பள்ளிகளுக்கு பெரும் பங்கு உண்டு இந்த காலகட்டத்தில் ஆண்டான் பிள்ளைகளும் அடிமைகளின் பிள்ளைகளும் ஒன்றாய் அமர்ந்து கல்விகற்கும் சூழலை உருவாக்கியதே அக்காலத்தைய அரசுப்பள்ளிகளின் சமூக புரட்சி என்றே சொல்ல வேண்டும்.தற்கால பகட்டு வாழ்க்கையில் அதே சமூகப்பணியை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதில் முனைப்பு காட்டி வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இது போன்று சமூகத்தோடும் அதன் ஒவ்வொரு நகர்விலும் இத்தகைய பள்ளிகள் தவிர்க்க முடியாத வரலாற்றை தன்னகத்தே தாங்கிக்கொண்டு நிற்கிறது
சரி அதெல்லாம் விடுங்க கட்டிடம் ஒழுங்கா இல்ல....கோச்சிங் சரியில்லை....ரிசல்ட் புல்லா வரல.....சென்டம் கம்மியா வந்திருக்கு.....இங்கே மெடிக்கல் போறவங்க கம்மி.....என்றெல்லாம் புலம்பும் நண்பர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்
நீங்க சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை ஆனால் நீங்களே மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கள் உங்க பிள்ளைக்கு அடிப்படை பாட அறிவு இருக்கா....? பொதுவான அடிப்படைக்கொள்கைகளை ஏனைய நடைமுறை வாழ்வியலோடு ஒப்புமை செய்யும் திறன் வளர்ந்திருக்கிறதா...? உங்களை மதிக்கிற பழக்கம் அல்லது உங்களது கருத்தை ஏற்கிற பக்குவம் இருக்கிறதா? தங்களது குடும்ப நிலையை உணர்ந்து செயலாற்றுகிறானா? சக நண்பர்களோடும் உறவினர்களோடும் அன்பு பாராட்டுகிறானா..?
நீங்க சொல்லும் பதிலை நீங்களே ஆய்வு செய்யுங்கள்..!
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று யோசிங்க..!
நமது கோரிக்கையான ஏதேனும் ஒரு படிப்பை படிக்க வலியுறுத்தி அந்த மாணவன் மீது கட்டவிழ்க்கப்படும் படி படி படி வன்முறைதான்.....பாடத்தையே புரியாமல் படிக்க கட்டாயப்படுத்துவதும்........சோ
சரி இதற்கும் அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்....அரசுப்பள்ளிகளிலும
சமூகத்தின் நல்ல குடிமகனாய்
நம் பிள்ளைகள் திகழ
அரசுப்பள்ளியில் சேர்ப்போம்.....
சமூகத்தை காப்போம்......
படம் : ஆனந்த விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக