வியாழன், 12 மார்ச், 2015

பொதுத்தேர்வு எழுதும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் அரசுப்பேருந்துகளில் அருகாமைப்பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுத ஏதுவாக பயணசீட்டு அனுமதி அட்டையை பயன்படுத்திட கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் கு.தியாகராஜன் வேண்டுகோள்


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் கு. தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வரும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுத அருகாமைப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது இதனால் பொதுத்தேர்வு எழுதும் கிராமப்புற பள்ளி  மாணவர்கள் தினசரி சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் உள்ளது இந்நிலையில் வருகிற மார்ச்  19 ந்தேதி தொடங்க விருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாக அரசுப்பேருந்துகளில் அருகாமைப்பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுத ஏதுவாக பயணசீட்டு அனுமதி அட்டையை பயன்படுத்தி கட்டண தவிர்ப்பு பெற்றிடும் வகையில் பொது அறிவிக்கை வெளியிட்டு  கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதால் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு மாணவர்களின் வங்கி கணக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் வங்கி வேலை நேரங்களில் உரிய முக்கியத்துவமின்றி  கணக்கு தொடங்க தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது இதனைக் கருத்திற்கொண்டு அருகாமை வங்கிக்கிளைகள் மூலம்  ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு முகாம் அமைத்து வங்கி கணக்கு தொடங்க வழிவகை செய்யவும் மேலும் மாணவர் வங்கிக்கணக்குகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்திட வங்கிகளை  பள்ளிக்கல்வித்துறை  கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்